search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்க வேண்டும்"

    • ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் தலைமையிடமாக மொடக்குறிச்சி பகுதி உள்ளது.
    • இந்நிலையில் 2016-ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பிறகு மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைப்பதில் காலதாமதம் ஆகி வருகிறது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் தலைமையிடமாக மொடக்குறிச்சி பகுதி உள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

    மொடக்குறிச்சி பகுதி யூனியனாக இருந்ததை அடுத்து கடந்த 2016-ம் ஆண்டு தாலுகாவாக தரம் உயர்ந்தது. இங்கு அரசு சார்ந்த மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலு வலகம், தாலுகா அலு வலகம், பேரூராட்சி, அரசு ஆண்கள், பெண்கள் மேல நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவமனை, வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், தோட்ட க்கலைத்துறை அலுவலகம், ப.எஸ்.என்.எல். அலுவலகம், 2 கிராம நிர்வாக அலுவல கங்கள், நூலகங்கள் மற்றும் தனியார் நிறுவன அலுவல கங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    மேலும் வாரச்சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், குளியல் சோப்பு தயாரிப்பு நிறுவனமும் இயங்கி வருகின்றன.

    இதற்காக மொடக்குறிச்சி தொகுதி மக்கள் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழு வதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பொது மக்கள் பல்லாயிரக்கண க்கானோர் வந்து செல்கின்ற னர்.

    அதேபோல் ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் செல்லும் மெயின்ரோடு என்பதால் இந்த வழியாக தனியார் மற்றும் அரசு பஸ்களும், சரக்கு வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ேமலும் தினமும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளூரிலும் வெளியூர் பகுதிக்கும் சென்று வரு கிறார்கள்.

    இந்நிலையில் 2016-ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பிறகு மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைப்பதில் காலதாமதம் ஆகி வருகிறது. மேலும் மொடக்குறிச்சிக்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடைகளின் நிழலை தேடி கால் கடுக்க நின்று செல்லும் நிலை உருவாகி உள்ளது.

    குறிப்பாக மொடக்குறிச்சி தாலுகா மற்றும் இதர அரசு மற்றும் தனியார் அலுவல கங்களுக்கு பல்வேறு பணி களுக்காக வரும் பொது மக்கள் பஸ் நிலையம் இல்லாததால் சிரமப்படு கின்றனர். அதேபோல் மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், முதியோர்கள் பஸ்சுக்காக நிற்க முடியாமல் அவதி ப்படுகின்றனர்.

    மொடக்குறிச்சியில் இருந்து அவல்பூந்துறை செல்லும் கணபதிபாளை யம், பாசூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், எழுமாத்தூர், விளக்கேத்தி, எல்லக்கடை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தாங்கள் செல்லும் பகுதிக்கு எப்பொழுது பஸ் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உள்ளது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளின் நிழல்களில் நின்று காத்திருந்து செல்கி ன்றனர்.

    மொடக்குறிச்சி 4 ரோட்டில் ஈரோடு முத்தூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு போதுமான விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் ஈரோடு முத்தூர் சாலை அருகே தாழ்வான பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருவதால் மாணவர்களின் கவனம் அடிக்கடி சிதறி வருகிறது.

    குறிப்பாக மழைக்கால ங்களில் வெள்ள நீர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து செல்வதால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியமாக மாறிவிடுகிறது. தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே இருப்ப தால் வாகனங்களின் சத்தம் மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆர்ப்பாட்டம், பேரணி என மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் நடப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனம் சிதறும் நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் நிலை உள்ளது.

    மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் ெபாது மக்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் ேராடடை கடக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் ேபாதுமான இட வசதி உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் படிக்கும் மாணவர்களை போதுமான இட வசதி உள்ள, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும். அங்கு பள்ளி மாணவ, மாணவி களுக்கு அதிக அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி இருப்பதுடன் விளையாட்டு மைதா னங்களும் மிகப்பெரிய அளவில் உள்ளது.

    மேலும் தற்போது இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்ட இடத்தில் அப்பகுதி முழுவதும் விரி வாக்கம் செய்து மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

    மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைந்தால் பொதுமக்கள் பஸ்சில் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கும். பஸசுக்கா காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. பொது மக்களுக்கு போதுமான வசதிகளும் கிடைத்துவிடும். விவசாய பொருட்களும் எளிதில் வேறு இடத்திற்கு பஸ்சில் கொண்டு செல்ல வசதியாக இருக்கும். நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்.

    மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடுமுடியில் பஸ் நிலையம் உள்ளது. ஆனால் மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமையாமல் இரப்பது வருத்தமாக உள்ளது.

    எனவே பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மொடக்குறிச்சி பஸ் நிலையத்தை விரைந்து அமைக்குமாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மொடக்குறிச்சி பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை.
    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை பகுதியில் 6500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கஸ்பா பேட்டை பகுதியில் அரசு பள்ளிகள், வாரச் சந்தைகள், வங்கிகள், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளன.

    ஆனால் கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை. இந்த பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவல்பூந்துறை அடுத்த கவுண்டிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் கவுண்டிச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் மட்டுமே ஆரம்ப சுமாதார நிலையத்துக்கு உடனடியாக செல்ல முடியும். பஸ்சை நம்பி உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வரு கிறார்கள்.

    ஒரு சிலர் பஸ் வசதி இல்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் முதி யோர், குழந்தைகள் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

    மேலும் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதால் நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என மக்கள் புகார் கூறினர்.

    எனவே கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    • மத்திய அரசு மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலை அடிப படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • கொள்முதல் செய்யும் இடங்களை தேர்வு செய்தல் பருவ கால பணியாளர்க ளுக்கு பயிற்சி அளித்தல், காவலாளிகள் நியமனம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

    கோபி:

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை மற்றும் பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கொடிவேரி அணை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டி நெல் நடவு செய்து களையெடுப்பு முடிந்து தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலை யில் உள்ளது. மத்திய அரசு மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலை அடிப படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் மத்திய அரசு 2022-23-ம் ஆண்டுக் கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்துள்ளது. அதன்படி மோட்ட ரகத்துக்கு ரூ.20.40-ம், சன்னரகத்துக்கு ரூ.20.60-ம், நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1 அதிகமாகும்.

    இந்த நிலையில் மோட்ட ரகத்துக்கு ரூ.1-ம், சன்னரகத்துக்கு 75 பைசாவும் ஊக்க தொகை வழங்க தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் மோட்ட ரகத்துக்கு ரூ.21.15-ம், சன்ன ரகத்துக்கு ரூ.21.60-ம் விவ சாயிகளுக்கு கொள்முதல் விலை கிடைக்கும்.

    விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரும் நெல் பதர் நீக்குதல், எடை போடுதல், முத்திரையிட்டு தையல் இடுதல், அட்டியிடுதல், லாரியில் ஏற்றுதல் மற்றும் கோணி சாக்கு, மின்சார கட்டணம், பில்யிடுதல், கொள்முதல் தொகையினை வங்கி வழி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்தல், மேலாண்மை பாதுகாப்பு காவலர் என செலவினங்க ளுக்காக 40 கிலோ சிப்பத்தி ற்கு சுமார் 20 ரூபாய் அரசு கொடுக்கிறது.

    எனவே இந்த தொகைக்கு மேல் 40 கிலோ சிப்பம் ஒன்றுக்கு விவசாயிகளிடம் அதிக தொகையினை பெறுவதில்லை என்பதை முகவரான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் அட்டியிடுதலுக்கான மரக்கட்டைகள், தார்ப்பாய்கள் தரமான கோணி சாக்குகள், பழுது இல்லாத பதர் நீக்கும் எந்திரம், லாரிகள் ஆகிய வற்றை உடனடியாக தயார் நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

    கொள்முதல் செய்யும் இடங்களை தேர்வு செய்தல் பருவ கால பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், காவலாளிகள் நியமனம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

    மேலும் வருகின்ற 8-ந் தேதி முதல் கொடிவேரி அணை பாசன பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்திட ஈரோடு மாவட்ட மண்டல மேலாளர் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×